search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேச்சு"

    அ.தி.மு.க.வின் தேர்தல் வெற்றிகளை யாராலும் தடுக்க முடியாது என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார். #rajanchellappamla

    மதுரை:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய, வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்தக்கடையில் இன்று நடைபெற்றது.

    அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திற்கு திட்டங்களை அள்ளித் தருகின்றனர். எய்ம்ஸ் உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் மதுரைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கிடைத்துள்ளது. அதுபோல சாலைகள், உயர்மட்ட மேம்பாலங்கள் மதுரை நகருக்கு கிடைத்துள்ளன.

    வருகிற உள்ளாட்சி தேர்தலானாலும் சரி, நாடாளு மன்ற தேர்தலானாலும் சரி அ.தி.மு.க. வின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என சிலர் சூழ்ச்சி வலை பிண்ணி பார்த்தனர். ஆனால் இதனை முறியடித்து முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் அ.தி.மு.க.வை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    எனவே நிர்வாகிகள் அனைவரும் அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறி அ.தி.மு.க. வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட நிர்வாகிகள் அம்பலம், அய்யப்பன், முருகேசன், தக்கார்பாண்டி, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். #rajanchellappamla

    ×